Tamil christian song ,video songs ,message ,and more

திங்கள், 5 செப்டம்பர், 2011

தியாகத்தில் தழைக்க மார்க்கம்

சீனாவில், ஏழைப்போதகர் ஒருவர் அரசாங்கத்திற்கு தெரியாமல் கிறிஸ்தவ ஊழியம் செய்து வந்தார். எப்படியோ, விஷயம் வெளியாக, போலீசார் அவரைக் கைது செய்து இழுத்துச் சென்றனர்.
அப்போது, வீட்டினுள் இருந்த அவரது பிஞ்சுமகன் ""அப்பா....அப்பா'' என்று அலறியபடியே ஓடிவந்தான்.
""ஓ...உமக்கொரு குழந்தை இருக்கிறதா!'' என்ற போலீசார், அந்த பிஞ்சு மலரையும் வண்டியில் தூக்கிப் போட்டுக் கொண்டு காவல்நிலையம் சென்றனர். அங்கே போதகருக்கு சித்திரவதை ஆரம்பமாயிற்று. ""மத ஊழியத்தை நீர் கைவிட்டாக வேண்டும். இல்லாவிட்டால், உமக்கு கடும் தண்டனை அளிக்கப்படும்,'' என்று ஒரு அதிகாரி மிரட்டினார். போதகரோ மறுத்து விட்டார்.
கோபமடைந்த அதிகாரி, அந்தப் போதகரை சித்ரவதை செய்ய உத்தரவிட்டார். இயேசுகிறிஸ்து அனுபவிக்காத சித்ரவதையா! அதை மனதில் நிலைநிறுத்திக் கொண்டு, போதகரும் சித்ரவதைகளை அனுபவித்தார். அதற்கு அவர் பணியாததால், அவர்களது அஸ்திரம் அந்த பிஞ்சுக்குழந்தையின் மீது திரும்பியது.
போதகரின் கண் முன்பே, ஒரு பூந்தொட்டிக்குள் அந்த சிறுவனை தூக்கி அழுத்தி மடித்து வைத்தான் "அதிகாரி' என்ற அந்தக் கொடியவன். சிறுவன் மேல் மணலும், சாம்பலும் கொட்டப்பட்டது. அவன் அலறித்துடித்தான். காவலர்கள் அதை ரசித்தனர். அந்த தொட்டியில் சில பூச்செடிகளை நட்டான் அதிகாரி.
""இப்போது என்ன சொல்கிறீர், ஊழியத்தை விடுகிறீரா... இல்லையா?'' என்றார் அதிகாரி.
போதகர் தன் மகனின் நிலைக்காக கண்ணீர் வடித்தாரே தவிர, ஊழியத்தை கைவிடுவது பற்றி அந்த அதிகாரியிடம் பேசவே இல்லை. கோபமடைந்த அதிகாரி மேலு<ம் மணலைக் கொட்டினான். சற்றுநேரத்தில் மூச்சு திணறி சிறுவன் இறந்து போனான். போதகர் தன் மகனின் நிலைக்காக கண்ணீர் வடித்தார். மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டு தினமும் சித்ரவதை செய்யப்பட்டார்.
சில மாதங்கள் கழித்து அவரை வெளியே அழைத்து வந்தனர்.
அதிகாரி அவரிடம்,""பார்த்தீரா! கிறிஸ்தவர்கள் எங்கள் பூந்தொட்டிகளுக்கு <உரமாகி பலனளிப்பதை...உம் மகனை புதைத்த பூந்தொட்டியில் அவன் உ<ரமாகி, சிவப்பு ரோஜா மலர்களைத் தந்துள்ளான்,'' என்றான்.
அந்த சிவப்பு ரோஜாக்களுக்கு கீழே தன் மகனின் உடல் இருப்பது கண்டு போதகர் வருந்தி கண்ணீர் விட்டாலும் கூட, இயேசுவுக்காக அவன் உயிர்விட்ட தியாகசரித்திரமும் புதைந்திருப்பதைக் கண்டு பெருமிதமும் கொண்டார்.
ஆம்...நம் இரட்சிப்பின் சந்தோஷத்தின் கீழே ஒரு மேலான தியாகம் உண்டு. தன்னையே கல்வாரியில் ஒப்புக்கொடுத்த தேவகுமாரனின் ரத்தத்தின் பெருந்துளிகள் உண்டு. தன் சொந்தக்குமாரனைக் காட்டிலும் நம்மை அதிகமாக நேசித்த பிதாவின் தியாக உள்ளம் உண்டு. கிறிஸ்தவமார்க்கம் உல்லாசபுரிக்கு செல்லும் சுகபோகமான மார்க்கமல்ல, அது பலியின் உடன்படிக்கை மார்க்கம். கிறிஸ்துவின் தியாகத்தில் தழைத்த அன்பு மார்க்கம்.

  1 கருத்து:

ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....

You may like also

Blog Archive

Blog Archive

Categories

Popular