Tamil christian song ,video songs ,message ,and more

வியாழன், 30 ஏப்ரல், 2015

ஜீசஸ் திரைப்படம் (the story of jesus )

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு ஒலி வடிவில் கண்டு மகிழுங்கள்












ஜீசஸ் திரைப்படம் 1300க்கும் மேற்பட்ட மொழிகளில் Jesus Movie in 1300 languvage - jesus movie in tamil Language

திங்கள், 20 ஏப்ரல், 2015

ஆண்டவரின் அன்பை பெறுவோம்!


* கடவுள் இல்லை என்று ஒரு கூட்டம் வாதிடுகிறது. "கடவுளை மிஞ்சி சாதிப்பேன்' என்றும் அது சவால் விடுகிறது. ஆனால், பைபிள் இதுபற்றி என்ன சொல்கிறது. கேட்டு பார்ப்போமே!
* மனுப்புத்திரனே! ஒரு தேசம் எனக்கு விரோதமாய் துரோகம் பண்ணிக் கொண்டேயிருந்து, பாவம் செய்தால், நான் அதற்கு விரோதமாக என் கையை நீட்டி, அதில் அப்பம் என்னும் ஆதரவுகோலை முறித்து, அதில் பஞ்சத்தை அனுப்பி, மனுஷரையும் மிருகங்களையும் அதில் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன்.

* சகல மனுஷரே! கேளுங்கள். நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடு இருப்பார். நீங்கள் அவரைத் தேடினால் உங்களுக்கு வெளிப்படுவார். அவரை விட்டுவிட்டீர்களேயாகில், அவர் <உங்களை விட்டுவிடுவார்
* நீ என்னை விட்டு பின் வாங்கிப் போனாய். ஆகையால், என் கையை உனக்கு விரோதமாய் நீட்டி, உன்னை அழிப்பேன். நான் பொறுத்து பொறுத்து இளைத்து போனேன்.


* மனுஷன் மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாகக் கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்கிறார்.
* எங்கள் தேவனுடைய கரம் தம்மைத் தேடுகிறவர்கள் எல்லார் மேலும் அவர்களுக்கு நன்மையாக இருக்கிறதென்றும், அவருடைய வல்லமையும் அவருடைய கோபமும் அவரை விட்டு விலகுகிறவர்கள் எல்லார் மேலும் இருக்கிறதென்றும் நாங்கள் ராஜாவுக்கு சொல்லியிருந்தோம்.
புரிந்து கொண்டீர்களா! ஆண்டவரின் அன்பைப் பெற நினைத்தால், அவரை அன்றாடம் ஜெபியுங்கள். அவரது ஆசிக்கரம் உங்களை நோக்கி நீளும்.

வியாழன், 16 ஏப்ரல், 2015

உத்தமனாய் வாழ்வோம்!



இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் அவதரித்து ஊழியம் செய்த போது 38 உவமைக் கதைகள் மூலம் அறிவுரை வழங்கினார்.
ஒரு உவமைக் கதையில், ""ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டத்தை உண்டாக்கி, தோட்டக்காரர்களுக்கு அதை குத்தகையாக விட்டு வெளிநாட்டிற்குப் போயிருந்தார்,'' என்று சொல்கிறார்.



ஆண்டவர் இந்த உலகத்தைப் படைத்த போது மனிதன் வாழ்வதற்கு ஏற்றவாறு மலைகளையும், சமுத்திரங்களையும், ஆறுகளையும், அதில் பல்வேறு உயிரினங்களையும், பறவைகள், விலங்குகள் அனைத்தையும் படைத்தார். ஒவ்வொன்றுக்கும் தன் நிலையில் இருக்கும்படி அவற்றிற்கு எல்லையும் உண்டாக்கினார். மலையில் வாழும் உயிரினங்கள் பாலை வனத்திற்கும், பாலைவனத்தில் வாழ்பவை மலைக்கும் செல்வதில்லை.

அதுபோல, ஆற்றுமீன்கள் கடலிலோ, கடல்மீன்கள் ஆற்றிலோ ஜீவிப்பதில்லை. ஆனால், மனிதன் மட்டும் தனக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் வீடு கட்டி குடிஇருக்க, விவசாயம், தொழில்கள் செய்து ஜீவிக்க இயற்கையாகவே கடவுள் வேலியடைத்து, நம்மிடத்தில் விட்டிருக்கிறார். நாம் எப்படி இருக்கிறோம்? இந்த உலகில் வாழ்வதற்காக குத்தகைதாரராக வந்திருக்கிறோம். உலகில் இருந்து எதையும் நம்மால் எடுத்துச் செல்ல முடியாது.

கடவுள் இந்த உலகைச் செம்மைப்படுத்த அநேக தீர்க்கதரிசிகளையும், போதகர்களையும் அனுப்பினார். வந்தவர்கள் அனைவரையும், வாழ்ந்தவர்கள் அடித்துக் கொன்று விட்டு நிமிர்ந்து கொண்டார்கள். நல்லவர்களால் திருத்த முடியாத போது, ""கடவுள் தன் ஒரே பேறான குமாரனாகிய இயேசுவைத் தந்தருளி, என் குமாரனுக்காகவாவது அவர்கள் அஞ்சுவார்கள் என்று அனுப்பினார். ஆனால் நடந்தது என்ன? அவரையும் சிலுவையில் அறைந்து விட்டனர்.

வேதம் இவ்வாறு சொல்கிறது,""திராட்சை தோட்டத்து எஜமான் .... அந்த கொடியரை கொடுமையாய் அழித்து (மத்தேயு 21:40,41) வேறு ஒருவனுக்கு திராட்சைத் தோட்டத்தைக் கொடுப்பார் என்றார்''.
நம்மால் இந்த உலகத்தின் இயற்கை வளத்தை காப்பாற்ற முடியாமல் போனால், நம் இடம் வேறு ஒருவருக்குக் கொடுக்கப்படும். வேறு சந்ததிக்கு இந்த உலகத்தை ஆண்டவர் கொடுத்து விடுவார் என்பதில் சந்தேகமில்லை. எனவே, உத்தமமான மனிதனாக உலகத்தை அதன் இயற்கை வளத்தைப் பாதுகாத்து வருங்கால சந்ததி வளமோடு வாழ துணை நிற்போம்.

சனி, 11 ஏப்ரல், 2015

சிறந்த உழைப்பு உயர்ந்த பதவி! -சாலமோன்

இஸ்ரவேல்' (இஸ்ரேல்) தேசத்தை ஆண்ட மூன்றாவது ராஜா சாலமோன். ஞானியாகவும், ரசனை மிக்கவராகவும் இருந்தார்.
இவருக்கு, ஜெருசலேமிற்கு வடக்கே இருந்த எப்ராயீம் மலையில், ஒரு சிறிய திராட்சைத் தோட்டம் இருந்தது. அதை ஒரு குடும்பத்துக்கு குத்தகைக்கு விட்டிருந்தார். அந்தக் குடும்பத்தின் மூத்த மகள் "சூலமித்தி'. மிகவும் அழகானவள்.



சூலமித்தியாளின் சகோதரர்கள் அவள் அழகாக இருக்கிறாளே என்று அவள் மேல் பொறாமை கொண்டு, சாலமோனின் திராட்சைத் தோட்டத்தை பகலில் காவல் காக்கும் வேலையை அவளிடம் கொடுத்தனர். வெயிலில் வேலை செய்தால் அவள் கருத்துப் போவாள் என்பது அவர்களது திட்டம். ஆனால், அவ்வாறு வேலை செய்த நிலையிலும் கூட, அவளுடைய கண்கள் புறாக்களின் கண்களைப் போல சாந்தமாக இருந்தன. கூந்தல் சுருண்டு அழகாக இருந்தது. பற்கள் வெண்மையாய் ஒளிர்ந்தன. தோட்டத்திலுள்ள லீலி புஷ்பம் போலவும், அழகான நீருற்றைப் போலவும் இருந்தாள்.
நிறம் கருத்தாலும், அவள் தன் வேலையை விடவில்லை. அந்த திராட்சைத் தோட்டத்தை நாசம் செய்கிற குள்ள நரிகளையும், சிறுநரிகளையும் பிடித்தாள்.
சிரமப்பட்டு தோட்டத்தைக் காத்தாள்.

இந்தநிலையில் ஒரு வசனத்தைக் கேளுங்கள்.
""உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம் பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதுக்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதுக்கும், நொறுங்குண்டு பணிந்த
ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம் பண்ணுகிறேன்''. ஏசாயா 57:15.
இதன் பொருள் என்ன தெரியுமா?

""யாரொருவர் எப்பேர்ப்பட்ட கஷ்டத்தையும் ஏற்று, அவரது கடமையைச் செய்கிறாரோ, அவர்களின் அருகில் ஆண்டவர் இருப்பார்'' என்பது தான்.
இந்த வசனத்திற்கேற்ப, ராஜா சாலமோன், ஒருநாள் திராட்சைத் தோட்டத்திற்கு வந்து சூலமித்தியாளைச் சந்தித்தார். அனைத்து வேலைகளையும் உற்சாகமாகச் செய்யும் அந்தப் பெண்ணைப் பார்த்தார். மற்றவர்களின் வஞ்சகப்பேச்சாலும், செய்கைகளாலும் நொறுங்கிப் போன இருதயத்தைக் கொண்டிருந்த அப்பெண்ணுக்கு அரண்மனையில் உயர்ந்த பதவி தர முடிவெடுத்தார்.

ஆம்...அவளது பொறுப்பான வேலை, அவள் உயர்பதவிக்கு செல்ல வழி வகுத்தது.
இவ்வுலகில் நாம் கடவுளின் பிள்ளைகளாக, உண்மையாக, உற்சாகமாக வேலைகளைச் செய்வோம். தாழ்மையாகப் பணிபுரிந்து, நொறுங்குண்ட இருதயத்தோடு, பணிந்த ஆவியுள்ளவர்களாக இருக்கும்போது, நம்மைப் படைத்த ஆண்டவர் நம்மிடத்தில் வாசம் பண்ணுகிறேன் என்று வருகிறார். இதை விட பேரானந்தம் இந்த உலகில் வேறு எது இருக்க முடியும்? 

உங்களுக்கு தெரியுமா ? சங்கீதங்களை எழுதியவர்கள் - சன்னியாசி போதகர்



சங்கீதங்களை எழுதியவர்கள் 

சங்கீத புத்தகத்தின் 150 சங்கீதங்களில் 100 ஐ எழுதியவர்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. தாவீது அரசன் 70க்கும் அதிகமான சங்கீதங்களையும், ஆசாப் 12, கோராகின் புத்திரர் 11, சாலொமோன் 2, மோசே 1, எமான் 1, ஈத்தான் 1 சங்கீதங்களை எழிதினார்கள். 50 சங்கீதங்கள் யாரல் எழுதப்பட்டன என்று பெயர் கொடுக்கப்படவில்லை. இப்படி பலராலும் எழுதப்பட்ட சங்கீதங்களின் தொகுப்புதான் சங்கீதப் புத்தகமாகும். 
- - யோபு, சங்கீதம், நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதப்பாட்டு ஒர் அறிமுகம் (ஆசிரியர் Dர்.செல்வின் ) என்ற புத்தகத்திலிருந்து 


நெய்யூரில் மீட் ஐயர் 

1818ம் ஆண்டு குளச்சல் துறைமுகத்தில் கையில் குழந்தையுடன் வந்திறங்கிய இங்கிலாந்தை சேர்ந்த மீட் ஐயர் தமது 35 வருட உழைப்பால் ஆயிரக்கணக்கான ஆத்துமாக்களை நாகர்கோவிலில் சம்பாதித்தவர். இவர் காலக்கட்டத்தில் தான் நெய்யூரில் 1831ல் ஆலயம் கட்டப்பட்டது. போர்டிங் பள்ளிக்கூடமும் நிறுவப்பட்டது. டாக்டர் ராம்சே என்பவரின் துணையைக் கொண்டு மருத்துவ ஊழியம் ஆரம்பிக்கபட்டு வியாதியஸ்தர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது. இன்று உலகம் முழுவதும் இந்தப் பகுதியின் ஆத்துமாக்கள் ஊழியர்களாக புறப்பட்டுச்சென்று கிறிஸ்துவின் வருகைக்கு அநேக ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தி வருகின்றனர். 
- --மறக்க முடியாத மாமனிதர்கள் ( நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு வெளியீடு) 


எபேசு நகரம் 

தற்போது தெற்கு துருக்கியாக விளங்குகிற பகுதியில் எபேசு அக்காலத்தில் துறைமுகப் பட்டணமாக விளங்கியது. ரோம ஆட்சியில் சின்ன ஆசியாவின் தலைநகரமாகத் திகழ்ந்தது. தெருக்களும், குளிக்கும் அறைகளும், நூல் நிலையங்களும், நாளங்காடியும், அரண்மனையும், 25,000 மக்கள் அமரத்தக்க இருக்கை வசதியுடன் கூடிய சலவைக் கற்களால் அமைக்கப்பட்ட விளையாட்டு அரங்கமும் வியக்கத்தக்க முறையில் விளங்கின. அந்த காலகட்டதில் ஏழு அதிசயங்களில் ஒன்றான தீனாள் தேவதையின் ஆலயம் எபேசு நகரில் இருந்தது.ஆதிக் கிறிஸ்தவத் திருச்சபையில் எபேசு சபை மிகவும் பெரியது, முக்கியமுமானதாக விளங்கியது. 
- - புதிய ஏற்பாடு ஓர் அறிமுகம் ( ஆசிரியர் : புலவர் சே.சுந்தரராசன் ) என்ற புத்தகத்திலிருந்து 


சன்னியாசி போதகர் 

'சன்னியாசி போதகர்' மற்றும் 'சன்னியாசி ஐயர்' என்று ஜனங்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் யார் தெரியுமா?. 1772ல் தமிழ் மொழியில் வேதாகமத்தை மொழி பெயர்த்த பெப்ரீஷீயல் தான். இவருடைய எளிய வாழ்வும், மிக சாதாரண் உடையும், எதற்கும் ஆசைப்படாத, அலட்டிக் கொள்ளாத தன்மையும் இவருக்கு இந்த பெயரைப் பெற்றுத் தந்தது. 
- - வேதாகம துணுக்குச்செய்திகள்- சகோ. வின்சென்ட் செல்வக்குமார். 

சனி, 4 ஏப்ரல், 2015

உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா! Uyirthelunthare alleluia

Uyirthelunthare alleluia



உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா!
ஜெயித்தெழுந்தாரே
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசு என்
சொந்தமானாரே

1.கல்லறைத் திறந்திடவே
கடும் சேவகர் பயந்திடவே
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
வல்லப் பிதாவின் செயல் இதுவே

2.மரித்தவர் மத்தியிலே
ஜீவ தேவனைத் தேடுவாரோ?
நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
நித்திய நம்பிக்கை பெருகிடுதே

3.எம்மா ஊர் சீஷர்களின்
எல்லா மன இருள் நீக்கின தாலே
எம் மனக் கலக்கங்கள் நீக்கின தாலே
எல்லையில்லாப் பரமானந்தமே

4.மரணம் உன் கூர் எங்கே?
பாதாளம் உன் ஜெயம் எங்கே?
சாவையும் நோவையும் பேயையும் ஜெயித்தார்
சபையோரே துதி சாற்றிடுவோம்

5.ஆவியால் இன்றும் என்றும்
ஆ! எம்மையும் உயிர்ப்பிக்கவே
ஆவியின் அச்சாரம் எமக்களித்தாரே
அல்லேலூயா துதி சாற்றிடுவோம்

6.பரிசுத்த மாகுதலை
பயத்தோடென்றும் காத்துக் கொள்வோம்
எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக
எழும்புவோமே மகிமையிலே

உயிரோடு எழுந்தவரே - Uyirodu Ezhundavarae



Uyirodu Ezhundavarae Rev. Paul Thangiah Song Lyrics.

youtube link

உயிரோடு எழுந்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஜீவனின் அதிபதியே
உம்மை ஆராதனை செய்கிறோம்
அல்லேலுயா ஒசன்னா-(4)

1. மரணத்தை ஜெயித்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
பாதாளம் வென்றவரே
உம்மை ஆரதைனை செய்கிறோம்
அல்லேலுயா ஒசன்னா -(4)

2. அகிலத்தை ஆள்பவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஆனந்த பாக்கியமே
உம்மை ஆரதைனை செய்கிறோம்
அல்லேலுயா ஒசன்னா -(4)

கல்வாரி இயேசுவின் இரத்தம் ஜெயம்



உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே.
1 பேதுரு 1: 18-19

ஒரு நாள் ஒரு போதகர் ஒரு பறவை கூண்டை கையில் எடுத்து கொண்டு வந்து, பிரசங்க பீடத்தண்டை வைத்தார். சபையார் எல்லாரும் எதற்கு அதை அங்கு கொண்டு வந்தார் என்று அவரையே நோக்கி கொண்டிருந்தார்கள். போதகர் பேச ஆரம்பித்தார். அவர் நேற்றைய தினம் வெளியே நடந்து கொண்டிருந்தபோது, ஒரு சிறுவன் ஒரு பறவை கூண்டையும் அதில் மூன்று பறவைகளையும் பிடித்து கொண்டு நடந்து கொண்டிருப்பதை கண்டார். அதை பின்வருமாறு கூற ஆரம்பித்தார்:

'அந்த சிறுவனிடம், 'மகனே, நீ என்ன கையில் வைத்திருக்கிறாய்?' என்று கேட்டேன், அதற்கு அந்த சிறுவன், 'மூன்று வயதான பறவைகளை இந்த கூண்டில் வைத்திருக்கிறேன்' என்றான். அதற்கு நான் 'இதை கொண்டு பொய் என்ன செய்ய போகிறாய்?' என்று கேட்டேன். அதற்கு அவன், 'அவைகளை கொண்டு நான் என் பொழுதை செலவழிப்பேன், அவைகளின் இறக்கையை பிடுங்குவேன், ஒன்றோடொன்று சண்டையிட வைப்பேன்' என்றான். அதற்கு நான், 'சரி எத்தனை நேரம் அதை செய்து கொண்டிருப்பாய், உனக்கு போர் அடித்த பின் அதை என்ன செய்வாய்?' என்று கேட்டதற்கு அவன், 'எனக்கு சில பூனைகளை தெரியும், அவைகளிடம் கொண்டு போய் விடுவேன், அவைகள் இவைகளை சாப்பிட்டு விடும்' என்றான். அப்போது நான், 'மகனே இதை நான் வாங்கி கொள்ள வேண்டுமானால், உனக்கு எவ்வளவு காசு தர வேண்டும்'

என்று கேட்டேன், அதற்கு அவன், 'சே, இந்த பழைய, ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாத பறவைகளை வைத்து என்ன செய்ய போகிறீர்கள்' என்று கேட்டான், அதற்கு நான் 'நீ எவ்வளவு என்று சொல்' என்று கேட்டேன். அவன் '50 ரூபாய்கள்' என்றவுடன், நான் கொடுத்து வாங்கி வந்து, இன்று வெளியே காணப்படும் மரத்தில் விடுதலையாக பறக்க விட்டேன், அவை இருந்த கூண்டு தான் இது' என்று விளக்கினார்.

பின்னர், பின்வரும் காரியத்தையும் கூற ஆரம்பித்தார்: ஒரு நாள் இயேசு கிறிஸ்துவும் பிசாசும் பேச ஆரம்பித்தார்கள். பிசாசு அப்போது தான் உலகத்திலிருந்து வந்திருந்தான். மிகவும் தெம்பொடும் பெருமையோடும் அவன் இருந்தான், இயேசுகிறிஸ்துவை பார்த்தவுடன், அவன் 'ஐயா, பார்த்தீர்களா, என்னிடம் எத்தனை பேர் மாட்டி கொண்டிருக்கிறார்கள் என்பதை? நான் ஒரு சிறு பொறியைதான் வைத்தேன், அதிலே மாட்டி கொண்டவர்கள் எத்தனை பேர் பாரும்' என்று பெருமையோடு பேசினான். அதற்கு இயேசுகிறிஸ்து, 'நீ அவர்களை வைத்து என்ன செய்ய போகிறாய்?' என்று கேட்டார். 'ஹா! என்ன செய்ய போகிறேன் தெரியுமா? அவர்களுக்கு திருமணம் செய்ய போதித்து, அவர்களை விவாகரத்து செய்ய வைப்பேன்,

ஒருவரையொருவர் பட்சித்து, சண்டையிட்டு வாழ்வை சீர்குலைப்பேன், அவர்களை எல்லாவித பாவங்களிலும் விழ வைத்;து, கடைசியில் எரிகிற அக்கினி கடலில் என்னோடு கூட எப்போதும் இருக்க வைக்க போகிறேன்' என்று சொல்லி பயங்கரமாக சிரித்தான். அப்போது இயேசுகிறிஸ்து 'எத்தனை கிரயம் கொடுத்தால் எனக்கு கொடுக்க விரும்புவாய்?' என்று கேட்க, அவன், 'இந்த ஜனம் மிகவும் மோசமானவர்கள், நல்லவர்களே இல்லை, உம்மை ஏற்று கொள்ளவே மாட்டார்கள், உம்மை அடிப்பார்கள், உம்மை துன்புறுத்துவார்கள், உம்மை சிலுவையில் அறைவார்கள், பாடுகளை சகிக்க வைப்பார்கள், இவர்களையா நீர் கிரயம் கொடுத்து வாங்க போகிறீர்?' என்று கேட்டான், அதற்கு இயேசு, 'நீ விலைக்கிரயம் மாத்திரம் சொல்' என்று உறுதியுடன் கேட்க அவன், 'உம்முடைய எல்லா கண்ணீரும், எல்லா இரத்தமும்' என்றான்.

இயேசுகிறிஸ்து அதை கிரயமாக அவனுக்கு கொடுத்து, நம்மை அவனிடமிருந்து மீட்டார்.
'உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே என்று வசனம் நமக்கு போதிக்கிறது. கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே' -(1 கொரிந்தியர் 6:20) என்று வேதம் நமக்கு சொல்கிறது. எந்த கிரயம்? இயேசுகிறிஸ்துவின் மாசில்லாத குற்றமில்லாத, விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டிருக்கிறோம்.
இயேசுகிறிஸ்து நம்மை விலைக்கிரயம் கொடுத்து வாங்கி விட்டபடியால், நாம் பிசாசிற்கு இனி அடிமைகளில்லை. அவன் நம்மை அவன் இஷ்டத்திற்கு ஆட்டுவிக்க முடியாது. நம்மை பாவத்திற்கு இழுக்க முடியாது. அப்படி அவன் இழுத்து நம்மை பாவத்திற்கு தூண்டும்போது நாம் விழுந்து போவோமானால், நம்மை மீட்டு கொண்ட கிறிஸ்துவுக்கு நாம் எப்படி நன்றியோடு இருக்க முடியும்? நாம் எப்படி வருங் கோபத்திற்கு தப்பித்து கொள்ள முடியும்? கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள் நீதிமான்களாக்கப்பட்டீர்கள்

(1கொரிந்தியர் 6:11). அப்படி பரிசுத்தமாக்கப்பட்ட உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள் (வசனம் 19-20). அந்தப்படி நாம் வாழ்ந்து, பிசாசிற்கு எதிர்த்து நின்று கர்த்தருக்கு மகிமையாய் ஜீவிக்க தேவன் தாமே ஒவ்வொருவரையும் பலப்படுத்துவாராக!

விடுதலை தருகின்ற இரத்தம் ஜெயம்
வெற்றிமேல் வெற்றிதரும் இரத்தம் ஜெயம்
பெலவீனம் நீக்கிடும் இரத்தம் ஜெயம்
பெலவானாய் மாற்றிடும் இரத்தம் ஜெயம்
இரத்தம் ஜெயம் இரத்தம் ஜெயம்
கல்வாரி இயேசுவின் இரத்தம் ஜெயம்
காருண்ய தேவனின் இரத்தம் ஜெயம்
ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வரும் எங்கள் நல்ல தகப்பனே, இயேசுகிறிஸ்துவின் மாசற்ற விலையேறப்பெற்ற திரு இரத்தத்தினால் எங்களை உமக்கென்று மீட்டு கொண்டீரே உமக்கு நன்றி. அந்த இரத்தத்தினால் நாங்கள் சாத்தானை ஜெயிக்கவும், வெற்றி மேல் வெற்றி எடுக்கவும், நீர் பாராட்டுகிற கிருபைக்காக நன்றி. பிசாசானவன் எங்களை பாவத்திற்கு அடிமைகளாக்காதபடி, எங்களை பெலவானாய் மாற்றுகிற கிறிஸ்துவின் இரத்தத்திற்காக நன்றி. சோர்ந்து போய், பிசாசின் தந்திரங்களுக்கு இடம் கொடுத்து, பாவத்தில் விழுந்து போன ஒவ்வொரு விசுவாசியையும் இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால், பிசாசின் மேல் வெற்றி எடுக்கிறவர்களாகவும் சாத்தானை ஜெயிக்கிறவர்களாகவும் மாற்றும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

வெள்ளி, 3 ஏப்ரல், 2015

அம்மாவின் சாதனை!



சிலகுழந்தைகள் நல்லவர்களாக வளரலாம். ஒரு சிலர் இளமையிலேயே கெட்டுப் போகிறார்கள். இது அவரவர் சூழ்நிலையைப் பொறுத்தது. ஜோசப் என்பவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தைக் கேளுங்கள்.
ஜோசப்பின் தாய் அவரை நல்ல முறையில் வளர்க்க கடும் முயற்சி மேற்கொண்டார். 17 வயது வரை எப்படியோ தாக்குப் பிடித்த அந்தத்தாய், கல்லூரியில் அவரை சேர்த்த பிறகு, திணற ஆரம்பித்தார். கெட்ட நண்பர்களின் சேர்க்கையால் ஜோசப் குடிக்க ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் பணம் இல்லாமல் போகவே, ஒரு நண்பனிடம் தன்னிடமிருந்த பைபிளை அடகு வைத்து, அதில் கிடைத்த பணத்தில் குடித்தார். அவர் அடகு வைத்த பைபிளின் அட்டையில் சில வசனங்களை அந்த தாயார் குறித்து வைத்திருந்தார். தன்னுடைய மகன் பைபிளைப் புரட்டாவிட்டாலும், அட்டையின் மீதுள்ள வாழ்க்கைக்குப் பயன் தரும் வசனங்களையாவது படிப்பார் என்பது அந்தத்தாயின் நம்பிக்கை. ஆனால், மகன் திருந்தும் முன்பே அந்த தாய் காலமாகிவிட்டார்.

ஜோசப் எப்படியோ படித்து டாக்டராகி விட்டார். ஒருநாள் நோயாளி ஒருவர் அவரிடம் சிகிச்சைக்கு வந்தார். மயங்கிய நிலையில் இருந்த அவரை, எங்கோ பார்த்ததுபோல் ஜோசப்பிற்கு தோன்றியது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. கண் விழித்த அவர், "எனது பையிலிருக்கும் அந்த புத்தகத்தை சீக்கிரமாகக் கொண்டு வந்து தாருங்கள்!' என முனகினார்.

ஜோசப் புத்தகத்தை எடுக்கச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, அந்த நோயாளி இறந்திருந்தார். அவ்வளவு ஆவலுடன் அந்த நோயாளி எடுக்கச் சொன்ன புத்தகம் என்னவாக இருக்கும்? என ஜோசப் அதை உற்று நோக்கினார். புத்தகத்தின் அட்டையில் தனது தாயின் கையெழுத்து இருப்பதைப் பார்த்து அதிர்ந்தார்.

அதில் பைபிள் வசனங்கள் சில எழுதப்பட்டிருந்தன. அது, தான் அடகு வைத்த பைபிள் என்பதும், இறந்து போனவர் தனது நண்பர் என்பதும் அவருக்குத் தெரியவந்தது. அந்த வசனங்களை அவர் அன்றுதான் வாசித்தார். குடிப்பழக்கத்தை மறந்தார். தன் தாயை நினைத்து கண்ணீர் வடித்தார். அவரைப் பாடாய்ப்படுத்தியதற்காக கர்த்தரிடம் மன்னிப்புக் கேட்டார்.
கதறியழுதார்.பெற்றவர்களின் எண்ணங்களும் ஜெபமும் காலம் கடந்தாவது சாதிக்கவே செய்யும். அது நம்மைத் திருத்தும். நல்வாழ்வு வாழச் செய்யும்.

You may like also

Blog Archive

Blog Archive

Categories

Popular