Tamil christian song ,video songs ,message ,and more

திங்கள், 5 செப்டம்பர், 2011

உங்களுக்கு தெரியுமா - பைபிள் விளக்கங்கள்-வேதாகம துணுக்குச்செய்திகள்- சகோ. வின்சென்ட் செல்வக்குமார்

பிலேமோன்

அப்போஸ்தலனாகிய பவுல் எழுதின 13 நிருபங்களில் இந்த ஒரு நிருபம் மட்டுமே பவுல் தன் நண்பருக்கு எழுதும் ஒரு தனிப்பட்ட கடிதம் ஆகும். இதை ஒரு சிபாரிசுக் கடிதம் என்று கூறலாம். பிலேமோன் என்பவருக்கு அப்போஸ்தலனாகிய பவுல் ஒநேசிமு என்பவரைப் பற்றி பரிந்துரைக்கும் கடிதம் இது.ஒரே அதிகாரத்தை கொண்ட 4 புத்தகங்களில் இதுவும் ஒன்று.
- - புதிய ஏற்பாட்டின் 27 புத்தகங்களுக்கான ஓர் அறிமுகம் (ஆசிரியர் Dr.செல்வின் ) என்ற புத்தகத்திலிருந்து


சேவல் கூவும் நேரம்

மாற்கு 13:35ல் சேவல் கூவும் நேரம் என்ற பதம் காணப்படுகிறதல்லவா? அது குறிப்பாக எந்த நேரம் என்று தெரியுமா? அது அதிகாலை 2:30 மணியிலிருந்து 3:00 மணிவரைக்கும் இடையிலான நேரம். கிரேக்குவிலே இந்த நேரத்திற்கு "அலெக்டோரோபோனியா" என்று பெயர். இந்த நேரத்தில் தான் இரவுக் காவலர்கள், மூன்றாவது ஷிப்ட் மாற்றிக் கொள்வது வழக்கம்.
- - வேதாகம துணுக்குச்செய்திகள்- சகோ. வின்சென்ட் செல்வக்குமார்.


சமகால தீர்க்கதரிசிகள்

ஏசயாவும், மீகாவும் சம காலத்தில் வாழ்ந்த தீர்க்க தரிசிகளாவர் ( ஏசாயா 1:1, மீகா 1:1 ). இவர்கள் இருவரும் தங்கள் தீர்க்கதரிசனங்களை முக்கியமாக யூதாவிலும், எருசலேமிலும் உரைத்தார்கள் ( ஏசாயா 1:1) அதே காலத்தில் வடபகுதியாகிய இஸ்ரவேலில் ஆமோசும், ஓசியாவும் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள் ( ஆமோஸ் 1:1; ஓசியா 1:1)
- - பழைய ஏற்பாடு ஓர் புத்தகம் ( ஆசிரியர் : புலவர் சே.சுந்தரராசன் )


யோவானும், பத்மு தீவும்

இயேசுவுக்கு அன்பான சீஷனாகிய யோவான், எபேசுவில் ஊழியம் செய்து கொண்டிருந்த போது, ரோமா புரிக்கு இழுத்துச் செல்லப்பட்டு கொதிக்கிற எண்ணையில் தூக்கிப் போடப்பட்டார். எந்தவித சேதமுமின்றி கர்த்தர் அவரை காத்தார். இராஜாவான தோமித்தியன் இதைக் கேள்விப்பட்டு பயந்து போய் பத்மு தீவுக்கு நாடு கடத்தினான். ஐக்கேரியன் கடலிலுள்ள மிகச்சிறிய தீவுதான் இந்த பத்முதீவு. சாமோஸ்க்கு 20 மைல் தூரம் தெற்கேயும், ஆசியா மைனருக்கு 24 மைல் மேற்கேயும் இந்த தீவு அமைந்திருந்தது. இங்கே வைத்துதான் வெளிப்படுத்தின விசேஷத்தை யோவான் எழுதினார்.
- - புதிய வானம், புதிய பூமி 1000 வருட அரசாட்சி ( ஆக்கியோன் : பாஸ்டர் S.ஞானமுத்து)

  5 கருத்துகள்:

ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....

You may like also

  • பயத்தை அறவே விடுங்கள்

    தேவனோடு உள்ள உறவை நாம் முழங்காலின் மூலமாகத்தான் உறுதிப்படுத்துகிறோம். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜாண்நாக்ஸ் என்ற பக்தர் முழங்காலிட்டு ஜெபித்து, ""ஸ்காட்...

  • ஆண்டவரை உணரலாம்

    ஒருமுறை ஒரு சந்தேகவாதி ஒரு கிறிஸ்தவரிடம், ""பரிசுத்த ஆவி என்று ஒருவர் உண்டு என்பதை நான் நம்பவில்லை. ஏன் தெரியுமா? அவரை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்...

  • தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!

    ஒரு சின்னக்குழந்தை தவறு செய்து விட்டது என்றால், பிரம்பைக்காட்டி பயமுறுத்தி மீண்டும் அத்தவறை செய்ய விடாமல் தடுக்கலாம். ஆனால், பெரிய குழந்தைகள் (இளைஞ...

  • உத்தம நண்பரான ஆண்டவர்

    இயேசுகிறிஸ்துவைப் பற்றி பல புத்தகங்கள், படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், இயேசு தம் வாழ்நாளில் ஒரு புத்தகம் கூட எழுதியதில்லை. அவரைக்குறித்து கல்...

  • ஜெபம் தரும் பலம் -டி.எல்.மூடி

    போதகர் டி.எல்.மூடி என்பவரது வாழ்க்கை சரிதத்தை ஒரு நூலாசிரியர் எழுதினார். அதில் குறிப்பிட்டுள்ள வரியைக் கேளுங்கள். ""அவர் அமெரி...

  • இயேசுவின் கிறிஸ்துவின் அற்புதங்கள் - (Miracles of Jesus Christ in Tamil)

      18 வருஷம் கூணி - (லூக்கா 13:11-13) அப்பொழுது பதினெட்டு வருஷமாய்க் பலவீனப்படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள். அவள் எவ்வள...

  • சர்வ வல்லமை பொருந்தியவர்

    ஒரு ஊரில் பலசாலியான வாலிபன் ஒருவன் இருந்தான். அவன் தன் நேரத்தையெல்லாம் உடற்பயிற்சி செய்வதிலும், தன் பலத்தைக் கொண்டு அரிய பெரிய ...

  • தாகம் -thagam(tamil christian songs)

    என்னோடு நீ இறைவா நீ ஒரு சங்கீதம் இறைவா உந்தன் இயேசு நான் உந்தன் இயேசுவே உன் நீ ஒளியாகும் நீ இல்லாமல் நிலவு த...

  • ஓசன்னா-14 ஜாலி ஆபிரகாம்(Jollee abraham Osanna-14)

    சகோ.ஜாலி ஆபிரகாம் பாடிய ஓசன்னா-14 கேட்டு  பயன்  பெறுங்கள் . நல்லவரே இயேசு எந்தன் ஜெபவேளை என் நேசர் இயேசுவோடு மகிமை மாட்சிமை ஒலி த...

BloggerWidget

Blog Archive

Blog Archive

Categories

Popular