Tamil christian song ,video songs ,message ,and more

செவ்வாய், 19 ஜூலை, 2011

நம்பினோர் கைவிடப்படுவதில்லை

கப்பர்நகூம் என்ற ஊருக்கு இயேசுநாதர் சென்றிருந்தார். அப்போது, ஒரு செல்வந்தன் அவரைச் சந்தித்தான்.
""ஆண்டவரே! என் வேலைக்காரனுக்கு திமிர்வாதம் வந்து படுத்த படுக்கையாகக் கிடக்கிறான்,'' என்றான். இயேசு அவனிடம்,""நான் வந்து அவனை குணப்படுத்துவேன்,'' என்றார். உடனே அந்த பணக்காரன், ""ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல. ஒரு வார்த்தை மட்டும் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்,'' என்றான்.

அதாவது, ""நீர் என் வீட்டுக்கு வரும் அளவு நான் தகுதியுடையவன் அல்ல, நீர் இங்கிருந்தே "அவன் குணமாகட்டும்' என்று ஒரு வார்த்தை சொன்னாலே, அவன் எழுந்து விடுவான்,'' என்றான் அந்த பணக்காரன். அந்தளவுக்கு அவன் இயேசுவின் வார்த்தைகள் மீது விசுவாசம் வைத்திருந்தான். இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார். தன் பின்னால் வந்தவர்களை நோக்கி, ""இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்,'' என்றார்.
பின்பு அந்த செல்வந்தனிடம், ""நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது,'' என்றார். அந்த நாழிகையிலேயே அவனது வேலைக்காரன் சொஸ்தமானான்.

ஆம்! பல வைத்தியர்களாலும் குணம் செய்ய முடியாத நோயை ஆண்டவர் நீக்கினார். அவரை நம்பியவர்கள் கைவிடப்பட்டதில்லை. இயேசுவின் வார்த்தைகளை, நற்செய்தியை விசுவாசித்தவர்களுக்கு என்றுமே துன்பமில்லை.

  1 கருத்து:

ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....

You may like also

  • திறமை இல்லாதவரையும் ஆண்டவர் நேசிப்பார்

    ""சகோதரரே! நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள். மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை, தேவன் உலக...

  • சுறுசுறுப்பை இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும் -ஜான் வெஸ்லி

    ஆண்டவருக்காக செய்யும் ஊழியத்திற்கு ரிட்டயர் மென்ட் எனப்படும் ஓய்வு என்பதே கிடையாது என்பதை ஜான்வெஸ்லி என்ற தேவ மனிதரின் வா...

  • பயத்தை அறவே விடுங்கள்

    தேவனோடு உள்ள உறவை நாம் முழங்காலின் மூலமாகத்தான் உறுதிப்படுத்துகிறோம். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜாண்நாக்ஸ் என்ற பக்தர் முழங்காலிட்டு ஜெபித்து, ""ஸ்காட்...

  • ஆண்டவரை உணரலாம்

    ஒருமுறை ஒரு சந்தேகவாதி ஒரு கிறிஸ்தவரிடம், ""பரிசுத்த ஆவி என்று ஒருவர் உண்டு என்பதை நான் நம்பவில்லை. ஏன் தெரியுமா? அவரை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்...

  • தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!

    ஒரு சின்னக்குழந்தை தவறு செய்து விட்டது என்றால், பிரம்பைக்காட்டி பயமுறுத்தி மீண்டும் அத்தவறை செய்ய விடாமல் தடுக்கலாம். ஆனால், பெரிய குழந்தைகள் (இளைஞ...

  • உத்தம நண்பரான ஆண்டவர்

    இயேசுகிறிஸ்துவைப் பற்றி பல புத்தகங்கள், படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், இயேசு தம் வாழ்நாளில் ஒரு புத்தகம் கூட எழுதியதில்லை. அவரைக்குறித்து கல்...

  • ஜெபம் தரும் பலம் -டி.எல்.மூடி

    போதகர் டி.எல்.மூடி என்பவரது வாழ்க்கை சரிதத்தை ஒரு நூலாசிரியர் எழுதினார். அதில் குறிப்பிட்டுள்ள வரியைக் கேளுங்கள். ""அவர் அமெரி...

  • இயேசுவின் கிறிஸ்துவின் அற்புதங்கள் - (Miracles of Jesus Christ in Tamil)

      18 வருஷம் கூணி - (லூக்கா 13:11-13) அப்பொழுது பதினெட்டு வருஷமாய்க் பலவீனப்படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள். அவள் எவ்வள...

  • சர்வ வல்லமை பொருந்தியவர்

    ஒரு ஊரில் பலசாலியான வாலிபன் ஒருவன் இருந்தான். அவன் தன் நேரத்தையெல்லாம் உடற்பயிற்சி செய்வதிலும், தன் பலத்தைக் கொண்டு அரிய பெரிய ...

BloggerWidget

Blog Archive

Blog Archive

Categories

Popular