Tamil christian song ,video songs ,message ,and more

செவ்வாய், 24 மார்ச், 2015

மறக்கக்கூடாத வசனம்!


ஒரு ஆற்றில் மழை காரணமாக கடும் வெள்ளம் ஓடிக் கொண்டிருந்தது.
ஆற்றங்கரையோரமாக நடந்து வந்த ஒரு சிறுமி, தண்ணீரில் தவறி விழுந்து விட்டாள். ஆற்றில் வேகமாக அடித்துச் செல்லப்பட்ட அவளை, கரையில் நின்ற மைக்கேல் என்பவர் பார்த்தார். சற்றும் யோசிக்காமல் தண்ணீரில் குதித்தார். வெள்ளம் அவரையும் இழுத்துச் சென்றது. எப்படியோ சிறுமியை தட்டுத்தடுமாறி பிடித்தார். ஆனாலும், கரைக்கு வர முடியாமல் அவரும் வெள்ளத்தில் மூழ்க ஆரம்பித்தார்.

அந்நேரத்தில் பாலம் ஒன்றில், அவர்கள் மோதி நின்றனர். பாலமும் வெள்ளத்தில் சேதமடைந்திருந்தது. ஆனால் நீட்டிக் கொண்டிருந்த கம்பி ஒன்றை, மைக்கேல் பற்றிக்கொண்டார். கரையில் நின்ற மற்றவர்கள் கலங்கி நின்றார்கள். மீட்புப் படையினருக்கு தகவல் சென்றது. அவர்கள் வேகமாக வந்து இருவரையும் காப்பாற்றி கரை சேர்த்தனர். கரைக்கு வந்த பிறகு, மக்கள் மைக்கேலைப் பாராட்டினார்.

அவரைப்பற்றி விசாரித்தபோது, அவர் சொன்ன தகவல் என்ன தெரியுமா?
"எனக்கு நீச்சல் தெரியாது!' என்பதுதான். ஆபத்தான நேரத்தில் அதை எதிர்த்துப் போராட கற்றுக்கொள்ள வேண்டும். அந்த ஆபத்தைச் சமாளிக்கத் தெரியாது என தயங்கி நிற்கக் கூடாது.

""நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள்; அவர்களுக்கு பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடே கூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னைக் கைவிடுவதுமில்லை,'' என்கிறது பைபிள். இந்த வசனத்தை வாழ்நாள் முழுவதும் மறக்காதீர்கள்.

0 comments:

கருத்துரையிடுக

ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....

You may like also

  • வேத தியானம் : ஒருமுகப்படுத்துதல் (Concentration) Dr. செல்வின்

    மனதில் ஓடும் எண்ணங்களை ஒரு குறிப்பிட்ட பொருளில் யோசிப்பதற்காக ஒன்று சேர்ப்பது ஒருமுகப்படுத்துதல் ஆகும். உதாரணம் ஒரு மரத்தின் இரண்டு கிளிகள் உட்கார்ந...

  • சகோ.தாயப்பன் சாட்சி 1 - thayappan testimony

    சகோ.தாயப்பன் அவர்களின் சாட்சி ...... Titus Thayappan Testimony Part 1   ...

  • பரிசுத்த வேதாகமம் எப்படிப்பட்ட புத்தகம்? Dr. செல்வின்

    கன்மலையை நொறுக்கும் சம்மட்டியான ஆண்டவருடைய வசனம் பாவத்தினால் கடினமடைந்திருக்கும் கற்பாறை போன்ற இருதயத்தை உடைக்க வல்லதாக இருக்கிறது. இருபுறமும் ...

  • சார்ல்ஸ் வெஸ்லி - பாடல் பிறந்த கதை

    120 வருடங்களுக்கு முன்  இங்கிலாந்து தேசத்திலிருந்து அமெரிக்க தேசத்திற்கு மெதுவாக ஒரு கப்பல் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போழுது தூர...

  • வெற்றி தந்த இயேசு

    சிலுவைப்போர் நடந்து கொண்டிருந்த சமயம் அது! ஒருநாள், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அரசர் பிலிப் அகஸ்டின் தனது படைவீரர்களை அழைத்தார். தன் கிரீடத்தைக் கழ...

  • மெய்யான இறைவன்

    ஒருமுறை ஒரு சந்தேகவாதி ஒரு கிறிஸ்தவரிடம், ""பரிசுத்த ஆவி என்று ஒருவர் உண்டு என்பதை நான் நம்பவில்லை. ஏன் தெரியுமா? அவரை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்...

  • அதிசயம் புரிந்த ஆண்டவர்

    அமெரிக்காவைச் சேர்ந்த அதோனிராம் ஜட்சன், மிஷனரி பணியாற்றும் ஆர்வத்துடன் இந்தியா வந்தார். பின் மியான்மர் (பர்மா) சென்று இறைப்பணிய...

  • தியாகத்தில் தழைக்க மார்க்கம்

    சீனாவில், ஏழைப்போதகர் ஒருவர் அரசாங்கத்திற்கு தெரியாமல் கிறிஸ்தவ ஊழியம் செய்து வந்தார். எப்படியோ, விஷயம் வெளியாக, போலீசார் அவரைக் கைது செய்து இழு...

  • அவர் பக்கம் நாம்!

    அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் ஒரு முக்கிய பிரச்னையைத் தீர்க்க வழி தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு நண்பர் வந்தார். அவர் லிங்...

BloggerWidget

Blog Archive

Blog Archive

Categories

Popular