Tamil christian song ,video songs ,message ,and more

திங்கள், 30 மார்ச், 2015

போகப்போக தெரியும் உன் நிலைமை என்ன புரியும்!



ஒருஅழுக்குத்துணி பேசுகிறது.
""முன்னொரு நாளில் நான் வண்ண வண்ணமாய் சிங்காரமாய் இருந்தேன். அவர்களின் கைகளில் நான் அழகிய துணியாக இருந்தேன். அவர்கள் என்னைக் கையிலெடுத்து என் அழகை ரசித்தனர். தங்கள் படுக்கை அறையில் எனக்கு சொகுசு இடம் அளித்தனர். முக்கியத்துவமும் பிரசித்தமும் அனுபவித்தேன். ஒருநாள் என்னைக் கிழே தள்ளி வெளியே எறிந்து விட்டனர்.
என்ன தவறு நிகழ்ந்தது? என்னை நேசித்து போற்றிய மக்கள் இவர்கள் தானே! எப்படி இவர்கள் என்னை இப்படி நடத்தலாம்? அதே முகங்கள்! அதே மக்கள்.
அப்பொழுது தான் குனிந்து என்னைப் பார்க்கத் துவங்கினேன்.

ஆம்..என் தோற்றம் முன்பிருந்தது போல் இல்லை. இடைவிடா உழைப்பினால் நைந்து போயிருந்தேன். எனது சேவையினால் பிரகாசம் இழந்திருந்தேன். இப்போது நான் கவர்ச்சியாய் இல்லை. ஒத்துக்கொள்ள விநோதமாகத்தான் இருந்தது. மக்கள் இப்போது என்னை விரும்பவுமில்லை, நேசிக்கவுமில்லை.

கடைத்தெருவில் கிடைத்த புதிய துணிகளை அவர்கள் பயன்படுத்தத் துவங்கினர். இந்தப் புதியவர்கள் உற்சாகமாகவும் இருந்தனர். என்னைப் போலவே முடிவடைவார்கள் என்ற எண்ணம் அவர்கள் இதயத்தில் உதிக்கவில்லை. நாள் போகப் போகத்தானே தெரியும்!''

இந்த அழுக்குத்துணியின் புலம்பல் போல மக்களும் நம்மைப் பயன்படுத்திக் கொள்வார்கள். வயதாகி விட்டால் தள்ளி விடுவார்கள். ""இந்நாள் வரைக்கும் உலகத்தின் குப்பையைப் போலவும், எல்லாரும் துடைத்துப் போடுகிற அழுக்கைப் போலவுமானோம்,'' என்று பவுல் எழுதின போது, இப்படித்தான் உணர்ந்திருப்பார்.

தேவனோ நம்மை எப்போதும் உபயோகப்படுத்துகிறார். அழுக்குத்துணியை உதறித்தள்ளியது போல உன்னை இந்த உலகம் தள்ளி விட்டதா! திடன் கொள்ளுங்கள். இயேசுவையும் உலகம் அப்படித்தானே நடத்தியது. ஆனால், இயேசு உன்னை ஒரு போதும் கைவிடமாட்டார்.

அதற்கு நீ செய்ய வேண்டியது என்ன? தேவன் உனக்கு கட்டளையிட்டதைச் செய்யும்படியாக முன்னேறிச் செல். உன் உழைப்பு வீணாகாது. ஒவ்வொரு ஜெபமும், ஒவ்வொரு போராட்டமும், நீ கொடுத்த ஒவ்வொரு ரூபாயும், ஒவ்வொரு கலசம் தண்ணீரும் ஒவ்வொன்றும் கணக்கிடப்பட்டு பதிவாகி விட்டது.
தேவன் உன்னை பாரப்படுத்தினவற்றை செய்து கொண்டே இரு! உன் ஓட்டத்தை முடிக்க அவரே உன்னைப் பெலப்படுத்துவார்.
தேவனுடைய வார்த்தை இதழிலிருந்து

  1 கருத்து:

ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....

You may like also

  • லேசான காரியம் உமக்கு அது - Lesana Kariyam

    லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் [ 2 ] பெலன் உள்ளவன் பெலன் அற்றவன் பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன் யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது லேசான ...

  • பாசமாய் இருப்போமே!

    ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர் ஏமி கார் மைக்கேல் அம்மையார். இவர் தென்னிந்தியாவிற்கு வந்து கிறிஸ்தவ ஊழியம் செய்து மரித்தார். .post blockquote { margi...

  • தமிழ் பைபிள் மொபைல் (கைபேசி ) Android Iphone ipad

    ஒரு காலத்தில் பைபிளை தலைமேல் வைத்து சர்ச்சுக்கு போவர்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன். சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு  முதலில் கல்வெட்ட...

  • ஜீசஸ் திரைப்படம் (the story of jesus )

    இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு ஒலி வடிவில் கண்டு மகிழுங்கள் ஜீசஸ் திரைப்படம் 1300க்கும் மேற்பட்ட மொழிகளில் Jesus Movie in 1300...

  • ஆண்டவரின் அன்பை பெறுவோம்!

    * கடவுள் இல்லை என்று ஒரு கூட்டம் வாதிடுகிறது. "கடவுளை மிஞ்சி சாதிப்பேன்' என்றும் அது சவால் விடுகிறது. ஆனால், பைபிள் இதுபற்றி என்ன சொல்கிறது. கேட்ட...

  • உத்தமனாய் வாழ்வோம்!

    இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் அவதரித்து ஊழியம் செய்த போது 38 உவமைக் கதைகள் மூலம் அறிவுரை வழங்கினார். ஒரு உவமைக் கதையில், ""ஒருவர் ஒரு திராட்சைத் ...

  • சிறந்த உழைப்பு உயர்ந்த பதவி! -சாலமோன்

    இஸ்ரவேல்' (இஸ்ரேல்) தேசத்தை ஆண்ட மூன்றாவது ராஜா சாலமோன். ஞானியாகவும், ரசனை மிக்கவராகவும் இருந்தார். இவருக்கு, ஜெருசலேமிற்கு வடக்கே இருந்த எப்ராயீம் ம...

  • உங்களுக்கு தெரியுமா ? சங்கீதங்களை எழுதியவர்கள் - சன்னியாசி போதகர்

    சங்கீதங்களை எழுதியவர்கள்  சங்கீத புத்தகத்தின் 150 சங்கீதங்களில் 100 ஐ எழுதியவர்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. தாவீது அரசன் 70க்கு...

  • உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா! Uyirthelunthare alleluia

    Uyirthelunthare alleluia உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா! ஜெயித்தெழுந்தாரே உயிருடன் எழுந்த மீட்பர் இயேசு என் சொந்தமானாரே 1.கல்லறைத் திறந்திடவே...

BloggerWidget

Blog Archive

Blog Archive

Categories

Popular