Tamil christian song ,video songs ,message ,and more

ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

கோபத்தை அறவே விட்டுவிடு(பைபிள் பொன்மொழிகள்)

* இரவோ முன்பே கழிந்து போயிற்று. பகலோ மிகவும் நெருங்கி விட்டது. ஆகையால் இரவின் செயல்களை உதறிவிட்டு ஒளியின் கவசங்களை அணிந்து கொள்வோம்.
* ஆட்டு மந்தைக்குள் வாசல் வழியே நுழையாமல் வேறு வழிகளில் நுழைபவன் கள்ளனாய் இருப்பான். கொள்ளைக்காரனாயுமிருப்பான்.
* தீபத்தைக் கொளுத்தி மரக்காலின் கீழ் வைக்க மாட்டார்கள். தீபக்காலின் மேல் தான் வைப்பார்கள். அது வீட்டிலுள்ள அனைவருக்கும் வெளிச்சம் தரும். அதுபோல மனிதர்கள் உங்கள் நற்காரியங்களைக் காணும் பொருட்டு உங்கள் ஒளி அவர்கள் முன் பிரகாசிக்கட்டும்.
* தேவையுள்ளவன் என்றைக்குமே மறக்கப்படுவதில்லை. எளியவர்களின் எதிர்பார்ப்பு என்றைக்குமே நசித்துப் போய் விடுவதில்லை.
* கோபத்திலிருந்து நீங்கி உக்கிரத்தைக் கைவிட்டு விடு. பொல்லாங்கு செய்வதற்கு ஏதுவான எரிச்சல் உன் புத்திக்கு வேண்டாம்.
* நடுகிறவனும் நீர் பாய்ச்சுகிறவனும் ஒரு மாதிரிதான். ஆயினும், ஒவ்வொருவனும் தன் உழைப்புக்கேற்ற ஊதியத்தையே பெறுவான்.

0 comments:

கருத்துரையிடுக

ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....

You may like also

Categories

Popular