Tamil christian song ,video songs ,message ,and more

வியாழன், 24 மார்ச், 2011

கிறிஸ்தவ பாடல்கள் பகுதி ஒன்று

ரம எருசலேமே பரலோகம் விட்டிறங்குதே
அலங்கார மனவாட்டியாய்

ஆமென் அல்லேலூயா (4)
1. எருசலேமே கோழி தன் குஞ்சுகளை
ஏற்றணைக்கும் ஏக்கத்தின் குரல் கேட்டேன்
தாய்ப்பறவை துடித்திடும் பாசம் கண்டேன்
தாபரமாய் சிறகினில் தஞ்சமானேன் - கனிவான எருசலேமே

2. ஜீவ தேவன் நகரினில் குடிபுகுந்தேன்
சீயோன் மலைச் சீருக்குச் சொந்தமானேன்
நீதி தேவன் நீளடி சிரம் புதைத்தேன்
நீதிமான்கள் ஆவியில் மருவி நின்றேன் - மேலான எருசலேமே

3. சர்வ சங்க சபையின் அங்கமானேன்
சர்வலோக நடுவரின் அருகில் வந்தேன்
பரிந்துரைக்கும் இரத்தத்தில் மூழ்கி நின்றேன்
பரிவாரமாய் தூதர்கள் ஆடி நின்றார் - ஆஹா என் எருசலேமே

4. விடுதலையே விடுதலை விடுதலையே
லோகமதின் மோகத்தில் விடுதலையே
நானேயெனும் சுயவாழ்வில் விடுதலையே
நாதர் தனில் வாழ்வதால் விடுதலையே - சுயாதீன எருசலேமே

5. கண்ணீர் யாவும் கனிவோடு துடைத்திடுவார்
எண்ணமதின் ஏக்கங்கள் தீர்த்திடுவார்
மரணமில்லை மனநோயின் துயரமில்லை
அலறலில்லை அழுகையின் சோகமில்லை – தலைகராம் எருசலேமே

லி பீடத்தில் என்னைப் பரனே
படைக்கிறேனே இந்த வேளை
அடியேனைத் திருச்சித்தம் போல
ஆண்டு நடத்திடுமே
கல்வாரியின் அன்பினையே
கண்டு விரைந்தோடி வந்தேன்
கழுவும் உம் திரு ரத்தத்தாலே
கறை நீங்க இருதயத்தை

2. நீரன்றி என்னாலே பாரில்
ஏதும் நான் செய்திட இயலேன்
சேர்ப்பீரே வழுவாது என்னைக்
காத்துமக்காய் நிறுத்தி - கல்வாரியின்

3. ஆவியோடாத்மா சரீரம்
அன்பரே உமக்கென்றும் ஈந்தேன்
ஆலய மாக்கியே இப்போது
ஆசீர்வதித்தருளும் - கல்வாரியின்

4. சுயமென்னில் சாம்பலாய் மாற
சுத்தாவியே அனல் மூட்டும்
ஜெயம் பெற்று மாமிசம் மாய
தேவா அருள் செய்குவீர் - கல்வாரியின்

5. பொன்னையும் பொருளையும் விரும்பேன்
மண்ணின் வாழ்வையும் வெறுத்தேன்
மன்னவன் இயேசுவின் சாயல்
இந்நிலத்தில் கண்டதால் - கல்வாரியின்

நான் சுகமானேன் (2)
புண்ணியரின் காயங்களால் – நான்
ஆ… அல்லேலூயா (2) – அல்லேலூயாஆனந்தமே
ஆ… அல்லேலூயா (2) – அல்லேலூயாஆரோக்கியமே

1. பிள்ளையின் அப்பம் (2)
பிள்ளையான எனக்கல்லோ - ஆ… அல்லேலூயா

2. என் நோய்கள் தீர்த்தார் (2)
சாபமான சிலுவையில் - ஆ… அல்லேலூயா

3. நான் ஏன் சுமப்பேன் (2)
எந்தன் இயேசு சுமந்த பின் - ஆ… அல்லேலூயா

4. யேகோவா தேவன் (2)
எந்தன் நல்ல பரிகாரி - ஆ… அல்லேலூயா

5. பரி பூரண ஜீவன் (2)
பரனீந்த ஜீவனிது - ஆ… அல்லேலூயா

6. இயேசுவின் இரத்தம் (2)
பிணி போக்கும் நல் மருந்து - ஆ… அல்லேலூயா

7. பலவீனன் அல்ல (2)
பலவான் நான் தேவன் சொன்னார் - ஆ… அல்லேலூயா

8. ஆயத்தமானேன் (2)
இயேசு ராஜன் வருகைக்கு - ஆ… அல்லேலூயா

திருக்கரத்தால் தாங்கி என்னை
திருச்சித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான்
அனுதினம் நீர் வனைந்திடுமே

1. உம் வசனம் தியானிக்கையில்
இதயமதில் ஆறுதலே
காரிருளில் நடக்கையிலே
தீபமாக வழி நடத்தும்

2. ஆழ் கடலில் அலைகளினால்
அசையும்போது என் படகில்
ஆத்தும நண்பர் இயேசு உண்டு
சேர்ந்திடுவேன் அவர் சமூகம்

3. அவர் நமக்காய்  ஜீவன் தந்து
அளித்தனரே இந்த மீட்பு
கண்களினால் காண்கிறேனே
இன்பக் கானான் தேசமதை

சுவையே துதிசெய் நீ மனமே
ஏசுவையே துதிசெய் – கிறிஸ்தேசுவையே

1. மாசணுகாத பராபர வஸ்து,
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து - ஏசுவையே

2. அந்தரவான் தரையுந் தரு தந்தன்
சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் - ஏசுவையே
3. எண்ணின காரியம் யாவு முகிக்க
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க - ஏசுவையே

ன்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்.

1. வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
வரைந்தெனக்காய் தந்ததாலே, ஸ்தோத்திரம்!
ஆபத்திலே அரும் துணையே
பாதைக்கு நல்ல தீபமதே. - என்னை

2. பயப்படாதே வலக்கரத்தாலே
பாதுகாப்பேன் என்றதாலே, ஸ்தோத்திரம்!
பாசம் என் மேல் நீர் வைத்ததினால்
பறிக்க இயலா தெவரு மென்னை - என்னை

3. தாய் தன் சேயை மறந்து விட்டாலும்
மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்!
வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்
உன்னதா எந்தன் புகலிடமே. - என்னை

4. திக்கற்றோராய்க் கைவிடேனே
கலங்கிடீரே என்றதாலே, ஸ்தோத்திரம்!
நீர் அறியா தேதும் நேரிடா
என் தலைமுடியும் எண்ணினீரே. - என்னை

5. உன்னைத் தொடுவோன் என் கண்மணியைத்
தொடுவதாக உரைத்ததாலே, ஸ்தோத்திரம்!
அக்கினியின் மதிலாக
அன்பரே என்னைக் காத்திடுமே. - என்னை

6. உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம்
வாய்த்திடாதே என்றதாலே, ஸ்தோத்திரம்!
பறந்திடுமே உம் நாமத்திலே
பரனே எனக்காய் ஜெயக்கொடியே. - என்னை

7. என்னை முற்றும் ஒப்புவித்தேனே
ஏற்றும் என்றும் நடத்துவீரே, ஸ்தோத்திரம்!
எப்படியும் உம் வருகையிலே
ஏழை என்னைச் சேர்த்திடுமே. - என்னை


  1 கருத்து:

ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....

You may like also

Categories

Popular