Tamil christian song ,video songs ,message ,and more

வெள்ளி, 3 ஏப்ரல், 2015

அம்மாவின் சாதனை!



சிலகுழந்தைகள் நல்லவர்களாக வளரலாம். ஒரு சிலர் இளமையிலேயே கெட்டுப் போகிறார்கள். இது அவரவர் சூழ்நிலையைப் பொறுத்தது. ஜோசப் என்பவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தைக் கேளுங்கள்.
ஜோசப்பின் தாய் அவரை நல்ல முறையில் வளர்க்க கடும் முயற்சி மேற்கொண்டார். 17 வயது வரை எப்படியோ தாக்குப் பிடித்த அந்தத்தாய், கல்லூரியில் அவரை சேர்த்த பிறகு, திணற ஆரம்பித்தார். கெட்ட நண்பர்களின் சேர்க்கையால் ஜோசப் குடிக்க ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் பணம் இல்லாமல் போகவே, ஒரு நண்பனிடம் தன்னிடமிருந்த பைபிளை அடகு வைத்து, அதில் கிடைத்த பணத்தில் குடித்தார். அவர் அடகு வைத்த பைபிளின் அட்டையில் சில வசனங்களை அந்த தாயார் குறித்து வைத்திருந்தார். தன்னுடைய மகன் பைபிளைப் புரட்டாவிட்டாலும், அட்டையின் மீதுள்ள வாழ்க்கைக்குப் பயன் தரும் வசனங்களையாவது படிப்பார் என்பது அந்தத்தாயின் நம்பிக்கை. ஆனால், மகன் திருந்தும் முன்பே அந்த தாய் காலமாகிவிட்டார்.

ஜோசப் எப்படியோ படித்து டாக்டராகி விட்டார். ஒருநாள் நோயாளி ஒருவர் அவரிடம் சிகிச்சைக்கு வந்தார். மயங்கிய நிலையில் இருந்த அவரை, எங்கோ பார்த்ததுபோல் ஜோசப்பிற்கு தோன்றியது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. கண் விழித்த அவர், "எனது பையிலிருக்கும் அந்த புத்தகத்தை சீக்கிரமாகக் கொண்டு வந்து தாருங்கள்!' என முனகினார்.

ஜோசப் புத்தகத்தை எடுக்கச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, அந்த நோயாளி இறந்திருந்தார். அவ்வளவு ஆவலுடன் அந்த நோயாளி எடுக்கச் சொன்ன புத்தகம் என்னவாக இருக்கும்? என ஜோசப் அதை உற்று நோக்கினார். புத்தகத்தின் அட்டையில் தனது தாயின் கையெழுத்து இருப்பதைப் பார்த்து அதிர்ந்தார்.

அதில் பைபிள் வசனங்கள் சில எழுதப்பட்டிருந்தன. அது, தான் அடகு வைத்த பைபிள் என்பதும், இறந்து போனவர் தனது நண்பர் என்பதும் அவருக்குத் தெரியவந்தது. அந்த வசனங்களை அவர் அன்றுதான் வாசித்தார். குடிப்பழக்கத்தை மறந்தார். தன் தாயை நினைத்து கண்ணீர் வடித்தார். அவரைப் பாடாய்ப்படுத்தியதற்காக கர்த்தரிடம் மன்னிப்புக் கேட்டார்.
கதறியழுதார்.பெற்றவர்களின் எண்ணங்களும் ஜெபமும் காலம் கடந்தாவது சாதிக்கவே செய்யும். அது நம்மைத் திருத்தும். நல்வாழ்வு வாழச் செய்யும்.

  1 கருத்து:

ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....

You may like also

  • ஜீசஸ் திரைப்படம் (the story of jesus )

    இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு ஒலி வடிவில் கண்டு மகிழுங்கள் ஜீசஸ் திரைப்படம் 1300க்கும் மேற்பட்ட மொழிகளில் Jesus Movie in 1300...

  • ஆண்டவரின் அன்பை பெறுவோம்!

    * கடவுள் இல்லை என்று ஒரு கூட்டம் வாதிடுகிறது. "கடவுளை மிஞ்சி சாதிப்பேன்' என்றும் அது சவால் விடுகிறது. ஆனால், பைபிள் இதுபற்றி என்ன சொல்கிறது. கேட்ட...

  • உத்தமனாய் வாழ்வோம்!

    இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் அவதரித்து ஊழியம் செய்த போது 38 உவமைக் கதைகள் மூலம் அறிவுரை வழங்கினார். ஒரு உவமைக் கதையில், ""ஒருவர் ஒரு திராட்சைத் ...

  • சிறந்த உழைப்பு உயர்ந்த பதவி! -சாலமோன்

    இஸ்ரவேல்' (இஸ்ரேல்) தேசத்தை ஆண்ட மூன்றாவது ராஜா சாலமோன். ஞானியாகவும், ரசனை மிக்கவராகவும் இருந்தார். இவருக்கு, ஜெருசலேமிற்கு வடக்கே இருந்த எப்ராயீம் ம...

  • உங்களுக்கு தெரியுமா ? சங்கீதங்களை எழுதியவர்கள் - சன்னியாசி போதகர்

    சங்கீதங்களை எழுதியவர்கள்  சங்கீத புத்தகத்தின் 150 சங்கீதங்களில் 100 ஐ எழுதியவர்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. தாவீது அரசன் 70க்கு...

  • உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா! Uyirthelunthare alleluia

    Uyirthelunthare alleluia உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா! ஜெயித்தெழுந்தாரே உயிருடன் எழுந்த மீட்பர் இயேசு என் சொந்தமானாரே 1.கல்லறைத் திறந்திடவே...

  • உயிரோடு எழுந்தவரே - Uyirodu Ezhundavarae

    Uyirodu Ezhundavarae Rev. Paul Thangiah Song Lyrics. youtube link உயிரோடு எழுந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் ஜீவனின் அதிபதியே உம்மை ஆராதனை செய...

  • கல்வாரி இயேசுவின் இரத்தம் ஜெயம்

    உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், ...

  • அம்மாவின் சாதனை!

    சிலகுழந்தைகள் நல்லவர்களாக வளரலாம். ஒரு சிலர் இளமையிலேயே கெட்டுப் போகிறார்கள். இது அவரவர் சூழ்நிலையைப் பொறுத்தது. ஜோசப் என்பவரின் வாழ்க்கையில் நடந...

BloggerWidget

Blog Archive

Blog Archive

Categories

Popular