Tamil christian song ,video songs ,message ,and more

வியாழன், 16 ஏப்ரல், 2015

உத்தமனாய் வாழ்வோம்!



இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் அவதரித்து ஊழியம் செய்த போது 38 உவமைக் கதைகள் மூலம் அறிவுரை வழங்கினார்.
ஒரு உவமைக் கதையில், ""ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டத்தை உண்டாக்கி, தோட்டக்காரர்களுக்கு அதை குத்தகையாக விட்டு வெளிநாட்டிற்குப் போயிருந்தார்,'' என்று சொல்கிறார்.



ஆண்டவர் இந்த உலகத்தைப் படைத்த போது மனிதன் வாழ்வதற்கு ஏற்றவாறு மலைகளையும், சமுத்திரங்களையும், ஆறுகளையும், அதில் பல்வேறு உயிரினங்களையும், பறவைகள், விலங்குகள் அனைத்தையும் படைத்தார். ஒவ்வொன்றுக்கும் தன் நிலையில் இருக்கும்படி அவற்றிற்கு எல்லையும் உண்டாக்கினார். மலையில் வாழும் உயிரினங்கள் பாலை வனத்திற்கும், பாலைவனத்தில் வாழ்பவை மலைக்கும் செல்வதில்லை.

அதுபோல, ஆற்றுமீன்கள் கடலிலோ, கடல்மீன்கள் ஆற்றிலோ ஜீவிப்பதில்லை. ஆனால், மனிதன் மட்டும் தனக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் வீடு கட்டி குடிஇருக்க, விவசாயம், தொழில்கள் செய்து ஜீவிக்க இயற்கையாகவே கடவுள் வேலியடைத்து, நம்மிடத்தில் விட்டிருக்கிறார். நாம் எப்படி இருக்கிறோம்? இந்த உலகில் வாழ்வதற்காக குத்தகைதாரராக வந்திருக்கிறோம். உலகில் இருந்து எதையும் நம்மால் எடுத்துச் செல்ல முடியாது.

கடவுள் இந்த உலகைச் செம்மைப்படுத்த அநேக தீர்க்கதரிசிகளையும், போதகர்களையும் அனுப்பினார். வந்தவர்கள் அனைவரையும், வாழ்ந்தவர்கள் அடித்துக் கொன்று விட்டு நிமிர்ந்து கொண்டார்கள். நல்லவர்களால் திருத்த முடியாத போது, ""கடவுள் தன் ஒரே பேறான குமாரனாகிய இயேசுவைத் தந்தருளி, என் குமாரனுக்காகவாவது அவர்கள் அஞ்சுவார்கள் என்று அனுப்பினார். ஆனால் நடந்தது என்ன? அவரையும் சிலுவையில் அறைந்து விட்டனர்.

வேதம் இவ்வாறு சொல்கிறது,""திராட்சை தோட்டத்து எஜமான் .... அந்த கொடியரை கொடுமையாய் அழித்து (மத்தேயு 21:40,41) வேறு ஒருவனுக்கு திராட்சைத் தோட்டத்தைக் கொடுப்பார் என்றார்''.
நம்மால் இந்த உலகத்தின் இயற்கை வளத்தை காப்பாற்ற முடியாமல் போனால், நம் இடம் வேறு ஒருவருக்குக் கொடுக்கப்படும். வேறு சந்ததிக்கு இந்த உலகத்தை ஆண்டவர் கொடுத்து விடுவார் என்பதில் சந்தேகமில்லை. எனவே, உத்தமமான மனிதனாக உலகத்தை அதன் இயற்கை வளத்தைப் பாதுகாத்து வருங்கால சந்ததி வளமோடு வாழ துணை நிற்போம்.

  1 கருத்து:

  1. ""என் குமாரனுக்காகவாவது அவர்கள் அஞ்சுவார்கள் என்று அனுப்பினார். ஆனால் நடந்தது என்ன? அவரையும் சிலுவையில் அறைந்து விட்டனர்.-------This is not accepted,god know all god sent jesus for crusify and delivered people from sin...he know he will die in cross.he is not for ""என் குமாரனுக்காகவாவது அவர்கள் அஞ்சுவார்கள்...please re text.

    பதிலளிநீக்கு

ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....

You may like also

  • பரிசுத்த வேதாகமம் எப்படிப்பட்ட புத்தகம்? Dr. செல்வின்

    கன்மலையை நொறுக்கும் சம்மட்டியான ஆண்டவருடைய வசனம் பாவத்தினால் கடினமடைந்திருக்கும் கற்பாறை போன்ற இருதயத்தை உடைக்க வல்லதாக இருக்கிறது. இருபுறமும் ...

  • சார்ல்ஸ் வெஸ்லி - பாடல் பிறந்த கதை

    120 வருடங்களுக்கு முன்  இங்கிலாந்து தேசத்திலிருந்து அமெரிக்க தேசத்திற்கு மெதுவாக ஒரு கப்பல் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போழுது தூர...

  • வெற்றி தந்த இயேசு

    சிலுவைப்போர் நடந்து கொண்டிருந்த சமயம் அது! ஒருநாள், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அரசர் பிலிப் அகஸ்டின் தனது படைவீரர்களை அழைத்தார். தன் கிரீடத்தைக் கழ...

  • மெய்யான இறைவன்

    ஒருமுறை ஒரு சந்தேகவாதி ஒரு கிறிஸ்தவரிடம், ""பரிசுத்த ஆவி என்று ஒருவர் உண்டு என்பதை நான் நம்பவில்லை. ஏன் தெரியுமா? அவரை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்...

  • அதிசயம் புரிந்த ஆண்டவர்

    அமெரிக்காவைச் சேர்ந்த அதோனிராம் ஜட்சன், மிஷனரி பணியாற்றும் ஆர்வத்துடன் இந்தியா வந்தார். பின் மியான்மர் (பர்மா) சென்று இறைப்பணிய...

  • தியாகத்தில் தழைக்க மார்க்கம்

    சீனாவில், ஏழைப்போதகர் ஒருவர் அரசாங்கத்திற்கு தெரியாமல் கிறிஸ்தவ ஊழியம் செய்து வந்தார். எப்படியோ, விஷயம் வெளியாக, போலீசார் அவரைக் கைது செய்து இழு...

  • அவர் பக்கம் நாம்!

    அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் ஒரு முக்கிய பிரச்னையைத் தீர்க்க வழி தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு நண்பர் வந்தார். அவர் லிங்...

  • எதற்கும் ஆஞ்சாத தாய்

    ""போதகர் செங்'' என்பவர் கிறிஸ்து மீது கொண்ட விசுவாசத்திற்காக சிறையிலடைக்கப்பட்டார். அவருடன் இணைந்திருந்த மற்ற கிறிஸ்தவர்கள் யார் என்று அறியும் பொர...

  • பெருகு நண்பர் சுவிசேஷ பாடல்கள் - perugu FMPB songs

    நண்பர் சுவிசேஷ ஜெபக்குழு அண்மையில் வெளியிட்ட பாடல்களின்  தொகுப்பு . வருபவர்கள் தயவு செய்து உங்கள் மேலான கருத்துக்களை கீழே கருத்திடுங்கள் ... ...

BloggerWidget

Blog Archive

Blog Archive

Categories

Popular